1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு கரையோரப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான

பெண்கள் குடியிருப்புக்குள் நுழைந்து பெண் உத்தியோகத்தர் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள் ஒருவரை பணி இடைநிறுத்தம் செய்யுமாறு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர பணிப்புரை விடுத்துள்ளார்.


பொலிஸ் விசேட அதிரடிப்படையின் மாங்குளம் முகாமிலிருந்து கரையோரப் பொலிஸுக்கு நியமிக்கப்பட்ட கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.


இந்தத் தவறான நடத்தை தொடர்பில் உள்ளக ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பிக்குமாறு பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர பணிப்புரை விடுத்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி