கைத்தொலைபேசியை சார்ஜ்
செய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி 5 வயதான சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மக்கொன முங்கென பிரதேசத்தை சேர்ந்த விஹிகி நெதாஷா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பேருவளை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.