காலி சிறைச்சாலையின் பெண் சிறைக்காவலர் ஒருவர்,
அதே சிறைச்சாலைச் சேர்ந்த பெண் சிறைக்காவலர் ஒருவரைக் கொலை செய்ய ஒப்பந்தம் வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு குற்றச் செயல்களுக்காக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் கைதி ஒருவருக்கே குறித்த பெண் சிறைக் காவலர் இந்த ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, சிறைக் காவலரைக் கொல்வதற்கான ஒப்பந்தத்தை குறித்த பெண் சிறைக்காவலர் தனக்கு வழங்கியதாக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அந்தப் பெண் மற்றொரு பெண்ணிடம் கூறியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.