straZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்ட எவரும் தேவையற்ற
வகையில் அச்சம் கொள்ள வேண்டாம் என தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் தலைவர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், அஸ்ட்ராஜெனெகாவை உற்பத்தி செய்யும் நிறுவனம், சிக்கல்கள் அரிதாகவே ஏற்படும் என்று ஒப்புக்கொண்டதாகவும், அதை அவர்கள் முன்பே ஒப்புக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இந்தச் சிக்கல்கள் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடியவை அல்ல என்றும் .விஜேவிக்ரம தெரிவித்தார்.