1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும்

பதில் செயலாளர் ஆகியோருக்கு  எதிராக கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன் விதான இன்று (15) இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். 

களுத்துறை உடற்கட்டமைப்பு விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் முன்னாள் இலங்கை கிரிக்கட் ஆலோசகருமான அநுர வீரசிங்க, தமக்கு எதிரான விசாரணைகளுக்கு தடை  உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி  .ஷம்மி சில்வா மற்றும் பதில் செயலாளர்  கிருஷாந்த கபுவத்த ஆகியோருக்கு எதிராக முன்வைத்த  மனுவை பரிசீலித்த பின்னரே இந்த  தடையுதடதரவு பிறப்பிக்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டினல் பிலிப்ஸ் நீதிமன்றில் இது தொடர்பான  வாதங்கைளை முன்வைத்தார்.

இதனைப் பரிசீலித்த  மாவட்ட நீதிபதி, ஒழுக்காற்று விசாரணை நடத்துவதைத் தடுத்து உத்தரவு பிறப்பித்ததுடன், பிரதிவாதிகளை எதிர்வரும் 29ஆம் திகதி  நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  அழைப்பாணை அனுப்பவும் உத்தரவிட்டார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி