திருடர்களைப் பாதுகாப்பதாக குற்றஞ்சாட்டப்படும் அரசாங்கம்
கடந்த இரண்டு வருடங்களில் திருடர்களைப் பிடிக்க பல சட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய தெல்தெனிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
திருடர்களைப் பிடிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள வலுவான சட்ட அமைப்பு ஒரு புரட்சியாகும் என தெரிவித்த ஜனாதிபதி, சட்ட முறையை நடைமுறைப்படுத்துவதற்கான வெளிநாட்டு அதிகாரிகளுக்கு நீதி அமைச்சு ஏற்கனவே பயிற்சியளிக்க ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்