முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான
மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் சேவைகளைப் பாராட்டி கல்முனையில் "அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்" அமைப்பதற்கு 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் கூறுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையில் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.