கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையை முடித்து வீடு திரும்பிக்
கொண்டிருந்த மாணவி ஒருவரைக் கடத்த பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வேன் கைப்பற்றப்பட்டதுடன் நான்கு இளைஞர்கள் எலதெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்..
நேற்று (15) குறித்த மாணவி கல்விப் பொதுப் தரப் பரீட்சையின் வினாத்தாளுக்குப் பதிலளித்துவிட்டு, தான் தங்கியிருந்த விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது யட்டிஹலகல சந்தியில் வைத்து அவரைக் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது, அவருடன் இருந்த மேலும் இரு பள்ளி மாணவிகள் அதைத் தடுக்க முயன்றனர், ஆனால் அவர்கள் அவர்களைத் தள்ளிவிட்டு மாணவியைக் கடத்திச் சென்றனர்.
இதனையடுத்து பொலிஸாருக்குக் கிடைத்த அவசர அழைப்பின் பேரில் எலதெனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதினாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் வேனை துரத்திச் சென்று சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன் வெனையும் கைப்பற்றினர்.