முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இலஞ்ச
ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் மொன்டேக் சரச்சந்திர இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விற்பனை செய்து பெறப்பட்ட முற்பணத்தில் உயிர்த்த ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈட்டை மைத்திரிபால சிறிசேன செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால் சம்பந்தப்பட்ட பணம் எப்படி சம்பாதித்தது? என விசாரிக்குமாறு கோரி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.