முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க
அமைச்சர் டயானா கமகே, அமைச்சுக்கு சொந்தமான நான்கு வாகனங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு தெரிவித்த போதிலும் நேற்று (17 வரை அவை கையளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு வாகனங்களையும் கடந்த 8 ஆம் திகதி அமைச்சிடம் ஒப்படைக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை ஒப்படைக்கப்படாத வாகனங்களில் டிஸ்கவரி ஜீப், டபுள் கேப், பிராடோ ஜீப் மற்றும் நிசான் கார் ஆகியவை அடங்கும்.
இவற்றில் டபுள் கெப் விபத்து காரணமாக குருணாகல் பொலிஸாரின் பாதுகாப்பில் இருப்பதாக தெரியவந்துள்ளது.