1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா பிரீமியர் லீக்  (LPL) 2020 கிரிக்கெட் போட்டியின்போது

பணத்துக்கு தாரை வார்த்தார் எனக் கூற்படும்  கிரிக்கெட் வீரர் சசித்ர சேனாநாயக்கவின் விசாரணை தொடர்பான நிபுணர் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அரசாங்க இரசாயனப் பகுப்பாளருக்கு அழைப்பாணைக் கடிதம் அனுப்புமாறு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இன்று (17) உத்தரவிட்டுள்ளார். 

பண ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் சசித்ர சேனாநாயக்கவுக்கு எதிராக விளையாட்டு ஊழல் தடுப்புப் பிரிவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2020 ஐபிஎல் போட்டியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விவகாரம்  தொடர்பில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விசாரணைகளை மேற்கொண்ட பின்னரே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி