உக்ரைனின் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யா தரப்பில்
போரிட்ட இலங்கையர்கள் சிலர் உக்ரேனிய ஆயுதப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக உக்ரைனிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் துருப்புக்களின் செயற்பாட்டு மற்றும் மூலோபாய குழுவின் பேச்சாளர் லெப்டினன்ட் கேர்னல் நாசர் வோலோஷினை இதனைத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், ரஷ்யா தனது படைகளை வலுப்படுத்த ஏனைய நாடுகளில் இருந்து கூலிப்படையினரை ஆட்சேர்ப்பு செய்கிறது என்றும் உக்ரைனிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.