பொலிஸாராலும் பாதுகாப்புப் படையினராலும் கைப்பற்றப்பட்ட சுமாா்
450 கிலோ போதைப்பொருட்களை அழிக்கும் நடவடிக்கை இன்று (18) மாலை 5.00 மணியளவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் புத்தளம் வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் வண்ணாத்துவில்லு லாக்டோஸ் தோட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த எரியூட்டி மூலம் இந்தப் போதைப்பொருட்கள் அழிக்கப்படவுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை, இராணுவம் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர் அண்மையில் பெருமளவிலான போதைப் பொருட்களை கைப்பற்றியமை தெரிந்ததே.