வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் மல்வத்தை மகாவிஹார
அநுநாயக்கரான விக்ரமராச்சி ஆயுர்வேத பல்கலைக்கழக வேந்தர் நியங்கொட விஜிதசிறி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த தேரர், உங்கள் சிந்தனை போக்கின்படி தேசிய ஒருமைப்பாட்டுக்கு உங்களால் சிறந்த பங்களிப்பை ஆற்ற முடியும் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என குறிப்பிட்டார்.
ஆளுநர் கருத்து தெரிவித்தபோது வடமேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை வழங்குவதன் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பாடசாலைகளிலும் பிரிவினாக்களிலும் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கான துரித நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தார்.