18 வயது இளைஞனைக் கடத்திய சம்பவம் தொடர்பில் அகலவத்தை
பொலிஸார் அவரது 17 வயது காதலி மற்றும் அவரது தந்தையையும் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் (16) மாலை முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹகம பொலேகொட பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன் தாக்கப்பட்டு கடத்தப்பட்டு காதலியின் வீட்டில் காணப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.இதனடிப்பைடையிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.