கேகாலை - அவிசாவளை பிரதான
வீதியின் கொட்டபொல பிரதேசத்தில் இன்று (18) மாலை இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் சுமார் 26 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 பேரில் இருவரின. நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கண்டியிலிருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பிந்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.