கடந்த இரண்டு வருடங்களை விட இந்த வருடத்தின் இதுவரையான
காலப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எதிர்காலத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை பொலிஸாரால் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தாம் கொலை செய்ய இலக்கு வைத்த நபரைக் கொல்வதற்குப் பதிலாக அவர்களது உறவினர்களைக் கொல்லும் போக்கு குற்றவாளிகள் மத்தியில் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.