புத்தளம் நகரில் சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான
பீடி இலைகளுடன் லொறியைக் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
புத்தளம் பிரிவு போக்குவரத்து பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆனமடுவ மற்றும் வேலாசிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.