நாடாளுமன்றத்தின் உணவுச்சாலையில்
வழங்கப்படும் உணவு தரமற்றதாக காணப்படுவதாக எம்பிக்கள் குழு சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்டணம் வசூலிக்கப்படும் தொகைக்கு போதுமான உணவை வழங்க ஏற்பாடு செய்யுமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து எம்பிக்களிடமிருந்து பெறப்படும் தொகைக்கு ஏற்றவாறு, நல்ல உணவை வழங்க ஏற்பாடு செய்யுமாறு சபாநாயகர் உணவுச்சாலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.