ஈரானின் ஜனபதிபதி இப்ராஹிம் ரைசி
நேற்று (19) அந்நாட்டின் மலைப் பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார் என்பது இன்று (20) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்நாட்டின் அரசியலமைப்பின்படி, இடைக்கால ஜனாதிபதி நியமிக்கப்படுகிறார். தற்போது நாட்டின் முதல் துணை ஜனாதிபதியாக பணிபுரிபவரே அந்த பதவிக்கு நியமிக்கப்படுவார்.
அந்தபட பதவியை தற்போது 68 வயதான முகமது மொக்பர் வகிக்கிறார். இதன்படி நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக மொக்பர் நியமிக்கப்படுவார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன