1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

விவாதத்துக்கு வழங்கிய ஜூன் 6 ஆம் திகதியை அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக் கொண்டார் என தேசிய மக்கள் சக்தி கட்சியின் நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்..

ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்படி, விவாதம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்து விவாதத்தை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நளின் பண்டாரவுடன் கலந்துரையாடவுள்ளதாக ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையிலான விவாதத்துக்கு  இம்மாதம் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலும், கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விவாதம் ஜூன் மாதம் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையிலும் இடம்பெறவுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி