கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றினால் சந்தேக நபராக
பெயரிடப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, நீதிமன்றில் சரணடைவதற்காக சில நிமிடங்களுக்கு முன்னர் வருகை தந்தார்.
அவரது சட்டத்தரணிகள் மூலம் மனுமொன்றை சமர்பிப்பதற்காக நீதிமன்றத்துக்கு அவர் வந்ததாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
பிந்திய செய்தி
இதனையடுத்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்ரவிட்ட நீதவான், எதிர்தரப்பினருக்கும் சட்டத்தரணி சமூகத்துக்கும் பாதகமான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என சந்தேக நபரை கடுமையாக எச்சரித்தார்.