கொழும்பு, பொரளை தேவி பாலிகா மகளிர் கல்லூரிக்கு
அருகாமையில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததால் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இன்று (21) காலை இந்த மரம் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பல வாகனங்களும் சேதமடைந்தன.
கொழும்பு மாநகர சபையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.