ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்ற
உத்தியோகபூர்வ அறிவிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் வெளியிடப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த மனுஷ நாணயக்கார,
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என பொய்ப் பிரசாரம் செய்து கட்சியினரை காப்பாற்றும் போரில் சஜித் பிரேமதாச ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் .