பிங்கிரிய பொலிஸ் சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்த பெண் ஒருவரை
பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
பிங்கிரிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்கிரிய பொலிஸ் நிலையத்தில் சிற்றுண்டிச்சாலையை நடத்தும் 50 வயதுடைய பெண் ஒருவர் சிற்றுண்டிச்சாலையில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டிருந்தார்..
இதன்படி, பிங்கிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தே கநபரான சார்ஜன்ட் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.