இத்தாலியில் நடைபெற்ற ஜிடி-4 கார் பந்தயத்தில் இலங்கை
மோட்டார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவ வெற்றி பெற்றுள்ளார்.
இன்று (22) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந் இவர், விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசியபோது,
இந்த போட்டி ஐரோப்பாவில் நடைபெறும் மிகப்பெரிய மோட்டார் பந்தய போட்டியாகும், அதற்காக உலகின் 30 நாடுகளின் மோட்டார் பந்தய சாம்பியன்கள் ஒன்றுபட்டனர்.
அவர்களில் பெரும்பாலோர் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்
இந்த கார் பந்தய போட்டியில் 50 கார்கள் கலந்து கொண்டதுடன், ஒவ்வொரு காருக்கும் இரண்டு சாரதிகள் இணைக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தார்.