ரஷ்யப் படைக்கு பணத்துக்காக கூலிப்படையினராக
இலங்கையர்களை அனுப்பி மனிதக் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவரும் மின்சார சபையின்எழுதுநர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொரளை மின்சார சபையில் தற்போது கடமையாற்றும் எழுதுநரே கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வரும் சந்தேகநபரான முன்னாள் இராணுவ மேஜர் பொலன்னறுவை பரக்கும் உயன, கணேமுல்ல கந்தலியத்த பலுவ, கிரிபத்கொட இரண்டாவது லேன், மாயமாவத்தை, கடவத்தை கஹாமுல பிரதேசங்களில் இரண்டு முகவரிகளில் தங்கியுள்ளதாக விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.