அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு மூன்று விமானங்கள்
மூன்று இடங்களில் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று விமானங்களும் கட்டுநாயக்க, இரத்மலானை மற்றும் ஹிங்குராக்கொட விமானப்படை தளங்களில் விழிப்புடன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மூன்று விமானங்களும் அவசரகால தகவல்களைப் பெற்றவுடன் உடனடி மீட்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விமானப்படை கூறுகிறது.
வெள்ள நிலைமை காரணமாக நாட்டின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.