1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கிளிநொச்சிக்கு வருகை தரும்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கப் போவதில்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 தொடர்ந்து கருத்துரைத்த யோகராசா கனகரஞ்சினி,
 
''இலங்கை அரசாங்கத்துடன் எத்தனை தடவைகள் பேசியிருக்கிறோம், ஜனாதிபதியாக இருந்தவர்களை எத்தனை தவடைகள் சந்தித்திருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
 
அத்துடன், இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட 12 க்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை பல்வேறு சந்தர்ப்பங்களின்போது சந்தித்துள்ளோம்.
 
இறுதியாக மூன்று மாத காலத்துக்குள் எங்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி ஐந்து பேரின் சுயவிபரக் கோவைகளை, சாட்சியங்களுடன் கையளித்திருந்தோம்.
 
ஆனால், நான்கு வருடங்களாகியுள்ள நிலையில், நாங்கள் வழங்கிய கோரிக்கைகள் தொலைந்து போய்விட்டதாகவும், மீண்டும் அவற்றை கையளிக்குமாறு கோருகின்றனர்.
 
இப்படியானதொரு இலங்கை அரசாங்கத்திடம் நாங்கள் பேசுவதற்கு தயாரில்லை. ஜனாதிபதியையும் சந்திக்கத் தயாரில்லை. சர்வதேசத்தின் ஊடான ஒரு பொறிமுறையை எதிர்பார்த்து எமது நகர்வுகளை முன்னெடுக்கின்றோம்'' எனத் தெரிவித்துள்ளார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி