இலங்கைக்கான சுற்றுலா விசாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள
மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை மாலைதீவு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி மாலைதீவு பிரஜைகள் இலங்கைக்கு வந்த பின்னர் 30 நாட்கள் சுற்றுலா விசாவை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது..
மேலும், மாலைதீவு பிரஜைகள் 30 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு, https://www.srilankaevisa.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் 6 மாத இலவச விசாவுக்கு ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம் இந்த விசாவுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் ஏற்கனவே இலங்கையில் உள்ள மாலைதீவு பிரஜைகள் மற்றும் வீசா நீடிப்பு தேவைப்படுவோர் கொழும்பில் உள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ள முடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.