இலங்கை வெளிவிவகார
சேவையில் தற்போதுள்ள மூன்றாவது செயலாளர் வெற்றிடங்களில் பாதியை அமைச்சர்களின் மகன்களைக் கொண்டு நிரப்புவதற்கு அமைச்சரவையின் அனுமதியை வெளிவிவகார அமைச்சு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டது.
திறந்த போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 117 விண்ணப்பதாரர்கள் இருக்கும் நிலையில், எந்தப் போட்டித் தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல், அரசு அமைச்சர்களின் பிள்ளைகள் பணிக்கமர்த்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் போட்டிப் பரீட்சைகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் 40 பேரை இணைத்துக் கொள்ள பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ள போதிலும், வெளிவிவகார அமைச்சு நேர்முகத் தேர்வில் 20 பேரை மாத்திரமே தெரிவு செய்துள்ளது.