சில பிரதேசங்களில் 350 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதா
கவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் சிறிய மழை பெய்தாலும் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.
கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் 350 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் சிறிதளவு மழை பெய்தாலும் மண்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.