பலத்த மழையுடன் கூடிய காற்றினால்
ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது இன்று (25) இரவு பெரிய மரம் ஒன்று வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த 62 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.