இந்தியாவில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா
ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகினர்.
அவர்களில் 9 சிறுவர்களும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பொழுதுபோக்கு மையத்தில் நேற்று (25) இந்த தீ விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது கணினி விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஏராளமானோர் ஈடுபட்டிருந்துள்ளனர்.
சில உடல்கள் முற்றாக எரிந்துள்ளதால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. எவ்வாறாயினும், அந்தந்த மையங்களின் உரிமையாளர்கள் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.