சுகவீனமுற்றுள்ள வடமாகாண சபையின் முன்னாள்
முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்தார்.
நேற்றிரவு (25) யாழ்ப்பாணத்தில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்துக்குச் சென்ற ஜனாதிபதி, அவரது நலம் விசாரித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டதுடன், அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.