1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

குவைத்தில் பணியின் போது உயிரிழந்த 27 வயது

இளைஞரின் மரணத்துக்கான காரணத்தை தெரிவிக்குமாறு அதிகாரிகளிடம் அவரது பெற்றோர்  கோரிக்கை விடுத்துள்ளனர். 

சீகிரிய இலுக்வல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதான டபிள்யூ. ஜி. தனுஜக சந்தருவன் பண்டார என்பவர் திருமணமாகாதவர், இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் குவைத்தில் உள்ள வீடொன்றுக்கு சாரதியாக வேலைக்குச் சென்றுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி தனது சகோதரர் வாகன விபத்தில் காயமடைந்துள்ளதாக அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர்  உயிரிழந்த சந்தருவனின் சகோதரியான சஷினி மல்ஷானியிடம்  தெரிவித்துள்ளார்.

சந்தருவனின் தாயாரும் குவைத்தின் வேறொரு பகுதிக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளதாகவும் அவரும் இன்று (28) அதிகாலை இலங்கை திரும்பியுள்ளதாக சஷினி மல்ஷானி கூறியுள்ளார்.

சந்தருவனின் மரணம் தொடர்பிலான விசாரணையின்போது, ​​அதே வீட்டில் அவர் தூக்கிட்டு உயிரிழந்ததாகவும் வீட்டின் களஞ்சியசாலை அறையில் அவர் தற்கொலை செய்து கொள்ளும் சிறிய காணொளி வாட்ஸ்அப் மூலம் பதிவாகியுள்ளதாகவும் குடும்பத்தினர் மேலும் தெரிவித்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி