வெலிப்பன்ன கல்மத்த பிரதேசத்தில்
பாடசாலை மாணவர்கள் மூவரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு கணவரின் உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக உயிரிழந்தவரின் மனைவி வெலிப்பன்ன பொலிஸில் இன்று (28) முறைப்பாடு செய்துள்ளார்.
பெப்ரவரி 14 ஆம் திகதி கல்மத்த பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 35 வயதான டொன் ரங்க விராஜ் ஜயசிங்க என்ற ஒரு பிள்ளையின் தந்தை தாக்கப்பட்டு உயிரிழந்தார்.
இறந்தவரின் மனைவியான தில்ஹரி பிரசங்கிகா தனது கணவரின் உடல் அடக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றபோதே இதனைக் கண்டு வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.