1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யாழ்.  கல்வி வலயத்திலுள்ள

பாடசாலை ஒன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவரின் கொடூரமான தாக்குதல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறிய 11 மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

10 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 11 பாடசாலை மாணவிகளே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
 
விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை சித்திரவதை செய்வதாக  மாணவிகள் முறையிட்டுள்ளனர
 
கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி அருட்சகோதரி தம்மைத் திட்டுவதாகவும மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதனையடுத்து அந்த  மாணவிகளும் யாழ் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டு ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், விடுதி பொறுப்பாசிரியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி