பதினேழு வயது பாடசாலை மாணவியின் நிர்வாண
புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டதாக கூறப்படும் 18 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகேகொட பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், நுகேகொட பிரதேசத்தில் உள்ள மாலை வகுப்பு ஒன்றுக்குச் சென்ற நிலையில் மத்தேகொட பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனது காதலன் சில மருந்துகளை உட்கொள்வதை அறிந்த அந்த மாணவி, காதலனுக்கு தீராத நோய் ஏற்பட்டுள்ளதை புரிந்து கொண்டு அவருடனான உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
பின்னர், அந்த மாணவி வேறொரு இளைஞனுடன் காதல் உறவைத் தொடங்கினார்,
இதையறிந்த சம்பந்தப்பட்ட மாணவன் , வீடியோ அழைப்புகள் மூலம் எடுக்கப்பட்ட மாணவியின் நிர்வாணப் புகைப்படங்களை இன்ஸ்டகிராம் சமூக ஊடகங்களில் ஸ்கிரீன் ஷாட்கள் மூலம் வெளியிட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.