கொழும்பு - பதுளை பிரதான
வீதியில் பெல்மதுல்ல நகருக்கு அருகில் தனியார் பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எம்பிலிப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும் எதிர்த்திசையில் இருந்து வந்த முச்சக்கரவண்டியும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர
சம்பவத்தில் காயமடைந்த 20 பேர் கஹவத்தை ஆதார வைத்தியசாலையிலும் ஏழு பேர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.