தொழிலதிபர் திலித் ஜயவீர
தலைமையிலான 'மவ்பிம ஜனதா கட்சியின்' தலைவர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம விலகியுள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை திலித் ஜயவீரவுக்கு அனுப்பியுள்ளார்.
எனினும், தனது பதவி விலகலுக்கான காரணத்தை அவர் கடிதத்தில் குறிப்பிடவில்லை.
அக்கடிதத்தில் திலித் ஜயவீரவின் அரசியல் செயற்பாடுகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
இது தொடர்பில் கலாநிதி சரத் அமுனுகமவிடம் கேட்டபோது, மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்தார்
இதேவேளை, விமல் வீரவங்ச மற்றும் ஏனையவர்களுடன் கூட்டு சேர்வதை சரத் அமுனுகம விரும்புவதில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.