1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி

மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இது தொடர்பான தடை உத்தரவை அடுத்த மாதம்  12 ஆம் திகதி  வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சட்டரீதியான உரிமை கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா  தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்

இதன்படி, மைத்திரிபால சிறிசேன உரிய பதவியில் பணியாற்றுவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்திருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி