நீதிமன்றத்தை அவமதித்ததாக
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மொண்டகு சரத்சந்திரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன்,
இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று (30) விசாரணைக்கு வந்தது.
இந்த மனு தொடர்பான உண்மைகளை உறுதிப்படுத்துமாறு பிரதிவாதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆணை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் மனுதாரரின் சட்டத்தரணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படவிடாமல் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தை மீறும் வகையில் செயற்பட்டு நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது