தனது திருமண நிகழ்வின்போது தனக்கான
ஆசிரியர் நியமனத்தைப பெற்றுக் கொண்ட யுவதி ஒருவர் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சம்பவம் பதிவாகியுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வில் அவர் ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொண்டமை விசேட அம்சமாகும்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த திலினி என்ற யுவதிக்கே இவ்வாறு ஆசிரியர் நியமனம் கிடைத்துள்ளது.
தென் மாகாண ஆளுநர் லக்க்ஷ்மன் யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.