நாடாளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும்
காலத்தை இரண்டு வருடங்கள் நீடிப்பது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (3) விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.
அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படும் என தெரிவித்த ரங்க பண்டார, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு பிட்டகோட்டே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் வைத்து விசேட அறிக்கையை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தனது அறிக்கை குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு அறிக்கைகளை வெளியிட ஆரம்பித்துள்ளனர். ஏழு பேர் கொண்ட குழுவொன்று சிறிகொத்தாவுக்கு முன்பாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் கூறினார்.