பாதாள உலக புள்ளியும் பாரிய போதைப்பொருள்
கடத்தல்காரருமாக கருதப்படும் ஹரக்கட்டாவின் மைத்துனரான மிதிகம ருவன் இன்று (31) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் துபாயில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ருவன் மிதிகமவை இந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்காக கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழு அங்கு சென்றிருந்தது.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட மிதிகம ருவன் மேலதிக விசாரணைகளுக்காக விசேட பாதுகாப்பின் கீழ் கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.