ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில்
இருந்தார் என சந்தேகிக்கப்படும் தெமடகொட ஒஸ்மன் புஷ்பராஜ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று (31) கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாகவும் அவர்களுக்கு உதவி, ஒத்தாசை வழங்கியதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒஸ்மன் புஷ்பராஜ் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவின் கூட்டு நடவடிக்கையின் போதே கொழும்பில் கைது செய்யப்பட்டார்.