எஸ். அஷ்ரப்கான்
வெளியான க.பொ.த. உயர் தர
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவத்துறையில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பிடித்த கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மாணவன் இஹ்ஸான் அஹமதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன், அந்தக கட்சியின் முக்கியஸ்தர், தொழிலதிபர் றிஸ்லி முஸ்தபா ஆகியோர் வாழ்த்திப் பாராட்டினர்.
இதன்போமு றிஸ்லி முஸ்தபா "டெப்" ஒன்றைப் பரிசளித்தார்
இவர் மருத்துவத்துறைக்கு தெரிவாகியுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கல்முனையைச் சேர்ந்த முஹம்மது பிர்தெளஸ், வை.எல்.சம்சுன் நிஷா ஆகியோரின் புதல்வரான இவர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஸ்தாபக செயலாளர் மர்ஹும் வை.எல்.எஸ்.ஹமீடின் சகோதரியின் மகன் (மருமகன்) ஆவார்.