சேதவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக
சந்தேகிக்கப்படும் T -56 ரக துப்பாக்கிகள் இரண்டு, 26 தோட்டாக்கள் மற்றும் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் இன்று (02) காலை வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தே நபர்கள் துபாயில் தலைமறைவாக உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சேதவத்த கசுனின் நெருங்கிய சகாக்கள் என தெரிய வந்துள்ளதாகவும் சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.