'வெசாக் அன்னதானம்' எனக் கூறப்பட்டு தெஹிவளை
பிரதான வீதியில் மெட்ரோ பொலிடன் (Metropolitan College) கல்வி நிறுவனம் நேற்றைய தினம் (01) நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
கல்வி நிறுவனத்தின் தவிசாளரும்,முன்னாள் கல்முனை மேயரும் தற்போதுவரை முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமாகச் செயற்படும் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இதில் கலந்து கொண்டு வருகை தந்தோருக்கு அன்னதானம் வழங்கினார்.
வெசாக் தினங்கள் முடிந்து வெசாக் வாரமும் நிறைவடைந்து ஜுன் மாதம் பிறந்த நிலையில் அவர் இந்த வெசாக் அன்னதான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
வெசாக் காலப் பகுதிக்குள் அதனை அவர் வழங்கியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கல்முனையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்பி மற்றும் கட்சி செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோருடன் அவர் சங்கமித்திருந்ததால் கொழும்பு வெசாக் அன்னதான நிழ்வை மறந்திருப்பார் அல்லது ஒத்திவைத்திருப்பார் என்று நம்பலாம்.
இருப்பினும் அவர் இப்போது இந்த அன்னதான நிழ்வைச் செய்தமையானது பெருமைக்கு மா இடித்தல் போன்றதாகாதா? வாழ்க சிமலத ஸ்பெஷல்!